Jaffna உள்ளிட்ட வடபகுதிகளில் இருந்து Colombo நோக்கி பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த அவதானத்துடன் செயல்படுமாறு அதிகாரிகள் அவசர அறிவிப்பு வெளியிட்டுள்ளனர்.
நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை மற்றும் கனமழை காரணமாக Puttalam–Colombo Main Road பல இடங்களில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறிப்பாக மாதம்பே பகுதி முழுவதும் மழைநீரால் மூழ்கியுள்ளதால் போக்குவரத்து நடவடிக்கைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் Kudiraikovil பகுதியில் வெள்ள நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருவதால், சாரதிகள் மிகுந்த கவனத்துடன் பயணிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
அவசர தேவையில்லாத பயணங்களை தவிர்க்கவும், மாற்று பாதைகளை பயன்படுத்தவும் அதிகாரிகள் பரிந்துரைத்துள்ளனர். குறிப்பாக இரவு நேரங்களில் மற்றும் கனமழை நேரங்களில் பயணிக்கும் போது கூடுதல் விழிப்புணர்வுடன் இருக்குமாறு பொதுமக்களிடம் கோரப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக