Sri Lanka அரசின் விவசாய மற்றும் விவசாய காப்புறுதிச் சபை முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மாத்தறை பகுதியில் நில்வளா ஆற்றின் தடுப்பணை கட்டுமானத்தால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு மொத்தம் ரூ.1,200 மில்லியன் இழப்பீடு வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வெள்ளப்பெருக்கு காரணமாக பல போகங்களில் நெற்பயிர் உள்ளிட்ட பயிர்கள் சேதமடைந்திருந்தன. குறிப்பாக 2019 முதல் 2022 வரையிலான காலப்பகுதியில் ஏற்பட்ட சேதங்களை அடிப்படையாகக் கொண்டு இழப்பீடு கணக்கிடப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் 5,000க்கும் மேற்பட்ட தகுதியுடைய விவசாயிகள் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. உற்பத்தி செலவு மற்றும் தற்போதைய நெல் விலை ஆகியவை கருத்தில் கொண்டு இழப்பீடு தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் இதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மே 27 முதல் முதற்கட்டமாக இழப்பீடு வழங்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மாத்தறை பகுதியில் நடைபெறவுள்ள ஆரம்ப நிகழ்வில் உயர்மட்ட அரசு பிரதிநிதிகள் கலந்து கொள்வார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக