Sri Lanka அரச சேவையில் பணியாற்றும் ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் வழங்கப்படும் என ஜனாதிபதி அறிவித்துள்ளார்.
Anura Kumara Dissanayake மட்டக்களப்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றும்போது இந்த அறிவிப்பை வெளியிட்டார். அரச சேவையை வலுப்படுத்தும் நோக்கில் சம்பள உயர்வு திட்டம் மூன்று கட்டங்களாக ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அரச சேவையில் நிலவும் வெற்றிடங்களை நிரப்பி, முறையான ஆட்சேர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார். காவல்துறை, முப்படை மற்றும் நிர்வாக சேவைகள் உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் திறமையான மற்றும் வலுவான நிர்வாக அமைப்பு அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த அறிவிப்பு அரச ஊழியர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக