பியர் தயாரிப்பில் அரிசி மற்றும் சர்க்கரை போன்ற மூலப்பொருட்களை பயன்படுத்துவதைத் தடை செய்யுமாறு கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் ரிட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அனுமதிப்பத்திரம் பெற்ற மதுபான சில்லறை விற்பனையாளர்கள் குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட இந்த மனுவில், Excise Department of Sri Lanka ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பலர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர். தற்போதைய நடைமுறைகள் கலால் சட்ட விதிகளுக்கு முரணாக இருப்பதாகவும், அரச மானியத்துடன் கிடைக்கும் அரிசி மற்றும் சர்க்கரை மதுபான உற்பத்திக்கு பயன்படுத்தப்படுவதால் தேசிய பொருளாதாரத்துக்கும் உணவுத் தன்னிறைவு இலக்கிற்கும் பாதிப்பு ஏற்படுவதாகவும் மனுதாரர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். எனவே பியர் உற்பத்தி தரநிலைகளை மறுபரிசீலனை செய்து, அரிசி மற்றும் சீனி பயன்பாட்டை கட்டுப்படுத்த நீதிமன்ற உத்தரவு வழங்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
செய்திகள்
பியர் தயாரிப்பில் அரிசி, சீனி பயன்பாட்டுக்கு தடை கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக