இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் Ramanathan Archchuna, தமிழக அரசின் பொதுப்பணித் துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் Aadhav Arjuna அவர்களை சென்னை தலைமைச் செயலகத்தில் மரியாதை நிமித்தமாகச் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இந்த சந்திப்பின் போது இலங்கை மற்றும் தமிழகத்துக்கிடையிலான தமிழ் மக்களின் நலன், கடற்றொழிலாளர் பாதுகாப்பு, மற்றும் பொருளாதார–சமூக வளர்ச்சி போன்ற முக்கிய விடயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு தரப்பும் தமிழ் மக்களின் நல்வாழ்வு மற்றும் எதிர்கால வளர்ச்சி தொடர்பாக இணைந்து செயல்பட வேண்டிய அவசியம் குறித்து கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.
செய்திகள்
தமிழக அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை சந்தித்த இலங்கை எம்.பி. அர்ச்சுனா: இருநாட்டு உறவுகள் குறித்து கலந்துரையாடல்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக