ஆப்கானிஸ்தானில் ஆட்சியில் இருக்கும் தலிபான் அரசு பெண்களின் உரிமைகளை மேலும் கட்டுப்படுத்தும் வகையில் 31 விதிகளைக் கொண்ட புதிய திருமணச் சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தில், பருவமடைந்த கன்னிப் பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவிக்காமல் அமைதியாக இருந்தால், அதுவே அவரது சம்மதமாக கருதப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் மனித உரிமை அமைப்புகள் மற்றும் சர்வதேச சமூகத்தில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. மேலும் குழந்தை திருமணம் தொடர்பான முடிவுகளில் தந்தை மற்றும் தாத்தாவிற்கு அதிக அதிகாரம் வழங்கப்படுவது, பெண்களின் சுதந்திரத்தை மேலும் குறைக்கும் நடவடிக்கையாக விமர்சிக்கப்படுகிறது. திருமணத்தை ரத்து செய்ய விரும்பினாலும் தலிபான் நீதிமன்ற அனுமதி அவசியம் எனவும் புதிய சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
செய்திகள்
ஆப்கானிஸ்தானில் புதிய சர்ச்சைச் சட்டம்: பெண்களின் மௌனம் சம்மதம் என தலிபான் விதி
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக