BREAKING
அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு முழுத் தடை: அரசின் புதிய அதிரடி அறிவிப்பு மதுபோதையில் கடமையாற்றிய அரச பேருந்து நடத்துநர்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் அவதானம் தேவை! யாழ். நெல்லியடி பேருந்து நிலையத்தில் இளைஞர் மீது கொடூர வாள்வெட்டு தாக்குதல் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலின் கொடூர தாக்குதல்: இளைஞர் உயிரிழப்பு அரச நிறுவனங்களில் பிளாஸ்டிக் தண்ணீர் போத்தல்களுக்கு முழுத் தடை: அரசின் புதிய அதிரடி அறிவிப்பு மதுபோதையில் கடமையாற்றிய அரச பேருந்து நடத்துநர்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை புதன் நட்சத்திர பெயர்ச்சி: இந்த ராசிக்காரர்கள் பண விஷயத்தில் அவதானம் தேவை! யாழ். நெல்லியடி பேருந்து நிலையத்தில் இளைஞர் மீது கொடூர வாள்வெட்டு தாக்குதல் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பலின் கொடூர தாக்குதல்: இளைஞர் உயிரிழப்பு

மதுபோதையில் கடமையாற்றிய அரச பேருந்து நடத்துநர்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை

மதுபோதையில் கடமையாற்றிய அரச பேருந்து நடத்துநர்: அதிகாரிகள் அதிரடி நடவடிக்கை
முல்லைத்தீவிலிருந்து வவுனியா நோக்கி பயணித்த Sri Lanka Transport Board பேருந்தின் நடத்துநர் ஒருவர் மதுபோதையில் கடமையாற்றியதாக எழுந்த முறைப்பாட்டைத் தொடர்ந்து, அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுத்துள்ளனர். பயணி ஒருவரின் தகவலின் பேரில் வவுனியா புதிய பேருந்து நிலையத்திற்கு அருகில் பேருந்து மறிக்கப்பட்டு சோதனை மேற்கொள்ளப்பட்டதில், நடத்துநர் மதுபானம் அருந்தியிருந்ததை ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அதிகாரிகள் மற்றும் போக்குவரத்து சங்க பிரதிநிதிகள் இணைந்து அவரிடமிருந்த பயணச்சீட்டுப் புத்தகம் மற்றும் வசூல் செய்யப்பட்ட பணத்தை கைப்பற்றியுள்ளனர். பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு உடனடியாக மாற்று நடத்துநர் நியமிக்கப்பட்டு பேருந்து சேவை தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பொது போக்குவரத்து சேவைகளில் பாதுகாப்பு மற்றும் ஒழுக்கம் குறித்து மீண்டும் கவலைகளை எழுப்பியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"