ஹுனான் மாகாணம் உள்ள லியுயாங் பகுதியில் இயங்கி வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று (05.05.2026) திடீரென ஏற்பட்ட சக்திவாய்ந்த வெடிவிபத்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விபத்தில் இதுவரை 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும், மேலும் 61 பேர் படுகாயமடைந்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வெடிவிபத்தால் தொழிற்சாலை கட்டிடம் முழுமையாக இடிந்து தரைமட்டமாகியுள்ளது. அதன் உள்ளே சிக்கியவர்களே அதிக உயிரிழப்புக்கு காரணமாகியுள்ளனர்.
காயமடைந்தவர்கள் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
வெடிவிபத்து ஏற்பட்ட பகுதியில் இருந்து சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவில் வசித்த மக்கள் பாதுகாப்பு காரணங்களுக்காக உடனடியாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக காரணம் என்ன என்பது குறித்து அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக