JanaNayagan திரைப்படம் இணையத்தில் லீக் ஆன விவகாரம் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. Vijay நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தின் முழு பதிப்பு வெளியாகியிருப்பது தயாரிப்பு நிறுவனத்திற்கு பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பாக சைபர் குற்றப்பிரிவு போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு இதுவரை 8 பேரை கைது செய்துள்ளனர். இதில், எடிட்டராக பணியாற்றிய Umashankar மீது முக்கிய குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரே படத்தை லீக் செய்ததாக ஆதாரங்கள் உள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஆனால் நீதிமன்றத்தில் ஆஜரான உமாசங்கர், இந்த குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுத்துள்ளார். படத்தை யாருடனும் பகிரவில்லை என்றும், உண்மையான குற்றவாளியை மறைக்க தன்னை பலிகடாவாக மாற்ற முயற்சிக்கிறார்கள் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், சமீபத்தில் இதய அறுவைசிகிச்சை செய்ததாகக் கூறி முன்ஜாமீன் கோரியுள்ளார்.
இதற்கு எதிராக தயாரிப்பு நிறுவனம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. கைதில் இருந்து தப்பிக்க திட்டமிட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் எனவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இந்த வழக்கு தொடர்பான மேலதிக விசாரணை ஏப்ரல் 30ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் திரையுலகிலும் சட்டவட்டாரங்களிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக