வளைகுடா பிராந்தியத்தில் நிலவி வந்த போர் பதற்றம் தற்காலிகமாக தணிந்துள்ள நிலையில், அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே இரண்டு வார கால போர்நிறுத்தம் அமுலுக்கு வந்துள்ளது. இந்த ஒப்பந்தத்தை அமெரிக்காவிற்கு கிடைத்த ஒரு வரலாற்று வெற்றியாக வெள்ளை மாளிகை வர்ணித்துள்ளது. இது குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ள வெள்ளை மாளிகையின் ஊடகச் செயலாளர் கரோலின் லெவிட், "ஜனாதிபதி ட்ரம்ப் ஹார்முஸ் நீரிணையை மீண்டும் வெற்றிகரமாக திறக்கச் செய்துள்ளார்; இது நமது இராணுவத்தின் வலிமைக்கு கிடைத்த சான்று" எனத் தெரிவித்துள்ளார்.
"ஆபரேஷன் எபிக் பியூரி" (Operation Epic Fury) என்ற பெயரில் முன்னெடுக்கப்பட்ட இந்த இராணுவ நடவடிக்கை 4 முதல் 6 வாரங்கள் வரை நீடிக்கும் என ஆரம்பத்தில் கணிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், 38 நாட்களில் அமெரிக்கா தனது முக்கிய இராணுவ இலக்குகளை எட்டியுள்ளதாக லெவிட் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த இராணுவ வெற்றி, ஈரானுடன் ராஜதந்திர ரீதியிலான பேச்சுவார்த்தைகளை முன்னெடுக்க ஜனாதிபதி ட்ரம்பிற்கு சர்வதேச அளவில் வலுவான செல்வாக்கை வழங்கியுள்ளது. இந்த போர்நிறுத்தம் குறித்து அமெரிக்க பாதுகாப்புத் துறைச் செயலர் பீட் ஹெக்செத் மற்றும் ஜெனரல் டான் கெய்ன் ஆகியோர் இன்று (புதன்கிழமை) மேலதிக விளக்கங்களை அளிக்கவுள்ளனர். அதேவேளை, இந்த போர்நிறுத்தம் குறித்து இஸ்ரேல் இதுவரை உத்தியோகபூர்வமாக எந்த கருத்தையும் வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக