சமூக வலைதளங்களில் வைரலான வீடியோக்கள் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் நடிகை மிருணாளினி ரவி. விஜய் சேதுபதியின் 'சூப்பர் டெலக்ஸ்' படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் அறிமுகமான இவர், தொடர்ந்து 'சாம்பியன்', 'எனிமி', 'எம்.ஜி.ஆர் மகன்' மற்றும் விக்ரம் நடித்த 'கோப்ரா' உள்ளிட்ட பல படங்களில் நடித்துத் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ளார். தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் பிஸியாக நடித்து வரும் அவர், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் எது என்ற கேள்விக்குப் பதிலளித்துள்ளார்.
தனக்குச் சம்பளம் கொடுத்து, பிரபலமாக்கி, ரசிகர்கள் மத்தியில் செல்வாக்கை ஏற்படுத்தித் தந்த இந்தச் சினிமாவில் இருப்பதே தனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் என அவர் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். மேலும், தனது நடிப்பு குறித்த விமர்சனங்கள் குறித்துப் பேசிய அவர், "யாராவது வந்து நீ சரியாக நடிக்கவில்லை என்று கூறினாலும் எனக்குக் கோபம் வராது. என்னைத் திருத்திக் கொள்ளும் வித்தை எனக்குத் தெரியும் என்பதால், எந்த எதிர்மறை விமர்சனங்களும் என்னைக் காயப்படுத்தாது" எனத் தனது தன்னம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக