அறிமுக இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கத்தில், ராதிகா சரத்குமார் நடிப்பில் வெளிவந்த 'தாய் கிழவி' திரைப்படம் உலகளவில் வசூல் ரீதியாகப் பெரும் வெற்றியைப் பெற்றுள்ளது. நடிகர் சிவகார்த்திகேயன் தயாரிப்பில், நிவாஸ் கே. பிரசன்னா இசையமைப்பில் உருவான இப்படம், வெளியான முதல் நாளில் இருந்தே மக்களிடையே அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்நிலையில், படம் வெளியாகி 13 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், உலகளவில் இதுவரை ரூ. 57.9 கோடி வசூலித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இப்படத்தின் வெற்றிக் கொண்டாட்டத்தைத் தொடர்ந்து, இயக்குநர் சிவகுமார் முருகேசன் தனது அடுத்த படைப்பாக கமல் ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் 'சேயோன்' திரைப்படத்தை இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக