இலங்கையின் முன்னணி ஈட்டி எறிதல் வீரரான ருமேஷ் தரங்கா பதிரகவின் 2028 லாஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் பயணத்திற்கு ஆதரவளிக்க, நாட்டின் மிகப்பெரிய வங்கி மற்றும் நிதி நிறுவனம் LOLC ஃபைனான்ஸ் பிஎல்சி (LOLC Finance PLC) அவருடன் கைகோர்த்துள்ளது.
2026 முதல் 2028 வரை செல்லும் காலப்பகுதிக்கான இந்த விசேட அனுசரணை ஒப்பந்தத்தின் கீழ், ருமேஷின் சர்வதேசப் போட்டிகளுக்கான பயிற்சிகள், பயணங்கள் மற்றும் போக்குவரத்து தேவைகளுக்கு ஒரு வாகனம் உட்பட அனைத்து வசதிகளும் நிறுவனம் வழங்கவுள்ளது.
LOLC ஃபைனான்ஸ் பிஎல்சியின் பணிப்பாளர் கிரிஷான் திலகரத்ன தெரிவித்ததன்படி, தேசிய விளையாட்டுத் திறமைகளை சர்வதேச மேடைக்கு கொண்டு செல்லும் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் ஒரு பகுதியாக இந்த அனுசரணை ஏற்படுத்தப்பட்டுள்ளது.
தற்போது உலகத் தரவரிசையில் ஒன்பதாவது இடத்தில் உள்ள ருமேஷ் தரங்கா, 2025 ஆம் ஆண்டு டோக்கியோவில் நடைபெற்ற உலகத் தடகள சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற முதல் இலங்கை ஈட்டி எறிதல் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக