மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்குத் தேவையான அவசர கால வசதிகளை மேற்கொள்வதற்காக, இலங்கைத் தூதரகங்களுக்கு விசேட நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்தார்.
ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். இந்த நிதி, மத்திய கிழக்கிலுள்ள இலங்கைத் தூதரகங்கள் ஊடாக இலங்கையர்களுக்குத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை உறுதிப்படுத்த பயன்படுத்தப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
பிராந்தியத்தில் மோதல் நிலைமை நிலவியபோதிலும், இலங்கையர்கள் வேலைவாய்ப்புக்காக மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்லும் பணிகளில் எவ்விதத் தடைகளும் இல்லாமல், வெளியேற்ற நடவடிக்கைகள் வழக்கமான முறையில் தொடர்வதாகவும் அவர் தெரிவித்தார்.
இதனடிப்படையில், அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு குறித்துப் பணியகம் மற்றும் தூதரகங்கள் தொடர்ந்து கண்காணித்து வருவதுடன், அவசர தேவைகளுக்காகத் தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக