BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

யாழ். பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடியேற்றப்பட்ட விவகாரம்: துணைவேந்தரிடம் மணிநேர விசாரணை!

யாழ். பல்கலைக்கழகத்தில் கருப்புக் கொடியேற்றப்பட்ட விவகாரம்: துணைவேந்தரிடம் மணிநேர விசாரணை!

இலங்கையின் சுதந்திர தினத்தன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் தேசியக் கொடியை இறக்கி, அதற்குப் பதிலாகக் கருப்புக் கொடியேற்றிய சம்பவம் தொடர்பாகப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் சுமார் 3 மணிநேரம் வாக்குமூலங்களைப் பதிவு செய்துள்ளனர்.


முக்கிய விடயங்கள்


விசாரணைப் பின்னணி: பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் பணிப்புரைக்கு அமைவாகப் பேராசிரியர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளைக் கொண்ட குழு நடத்திய விசாரணையில், இச்சம்பவத்துடன் தொடர்புடைய 2 மாணவிகள் உட்பட 30 மாணவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மாணவர்களின் நிலைப்பாடு: தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு மதிப்பு வழங்கப்படாத வரை சுதந்திர தினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொலிஸ் நடவடிக்கை: நேற்று செவ்வாய்க்கிழமை பல்கலைக்கழக வளாகத்தினுள் வாகனத்துடன் சென்ற குற்றத்தடுப்புப் பிரிவினர், துணைவேந்தர் மற்றும் பதிவாளரிடம் நீண்டநேர விசாரணை நடத்தினர். பல்கலைக்கழகத்தினுள் பொலிஸார் இவ்வாறு விசாரணை நடத்தியமைக்கு மாணவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணைகள்: காணொளி ஆதாரங்களின் அடிப்படையில் பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் மற்றும் அடையாளம் காணப்பட்ட மாணவர்களிடமும் வாக்குமூலங்களைப் பெறப் பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"