கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் நாளை ஆரம்பமாக உள்ளதாக Department of Examinations Sri Lanka அறிவித்துள்ளது.
நாளை முதல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை முதல் கட்ட விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இரண்டாம் கட்ட பரீட்சை மதிப்பீட்டு நடவடிக்கைகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, கல்வி பொதுத் தராதர சாதாரண தர பரீட்சையின் பிரயோக பரீட்சைகள் ஏப்ரல் 22ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இதனிடையே, சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு பின்னர் வெளியிடப்படும் என பரீட்சைகள் திணைக்களம் முன்னதாக அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக