உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக அதிகரித்து வருவதால், இலங்கையில் எரிபொருள் விலையை உடனடியாகத் திருத்தம் செய்ய வேண்டும் என கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறை பேராசிரியர் பிரியங்க துனுசிங்க தெரிவித்துள்ளார்.
நிபுணர்கள் முன்வைக்கும் முக்கிய வாதங்கள்
விலை உயர்வுக்கான சாத்தியம்: உலகச் சந்தையில் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 115 டொலரை நெருங்கியுள்ள நிலையில், இலங்கையில் 92 ரக பெற்றோல் விலை 360 - 370 ரூபாய் வரை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளதாக அவர் கணித்துள்ளார்.
பணவீக்க அபாயம்: எரிபொருள் விலை உயர்வு என்பது மின்சாரக் கட்டணம், போக்குவரத்து மற்றும் அனைத்து அத்தியாவசியப் பொருட்களின் விலையையும் உயர்த்தி, நாட்டை மீண்டும் ஒரு உயர் பணவீக்கச் சூழலுக்குத் தள்ளக்கூடும்.
தாமதத்தின் விளைவு: ஏப்ரல் மாத பண்டிகை காலம் வரை இந்த விலை உயர்வைத் தாமதப்படுத்துவது, பின்னர் ஒரே நேரத்தில் மக்களுக்குப் பெரிய பொருளாதாரப் சுமையை (Big Shock) ஏற்படுத்தும். எனவே, அந்த அழுத்தத்தைச் சிறிய அளவில் முன்கூட்டியே பகிர்ந்தளிப்பதே (Spread the pressure) சிறந்தது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்பட்ட விலை திருத்தத்தின் படி தற்போதைய நிலவரம்
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக