தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் திரைப்படம் ஜெயிலர் 2. இதன் முதல் பாகம் பெரும் வெற்றி பெற்றது.
நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் ரஜினிகாந்த், சிவராஜ்குமார், யோகி பாபு, ரம்யா கிருஷ்ணன், எஸ்.ஜே. சூர்யா, சுராஜ் ஆகிய பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் ராக்ஸ்டார் அனிருத் இசையை வழங்குகிறார்.
பாலிவுட் நடிகர் ஷாருக் கான் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில், போலீஸ் வேடத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு நிறைவு பெற்ற நிலையில், ரஜினிகாந்த், எஸ்.ஜே. சூர்யா, ஷாருக் கான் இடையிலான காட்சிகள் தற்போது படமாக்கப்பட்டு வருகிறது.
இந்த படப்பிடிப்பு 10 நாட்கள் நடந்து, பின்னர் முழுமையாக முடிவடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் மாதத்தில் ஜெயிலர் 2 வெளியிடப்பட வாய்ப்புள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக