இலங்கையிலிருந்து ரோம் நகருக்கு புறப்பட்ட ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 1213 தொடர்பாக சமூக ஊடகங்களில் பரவும் தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பானவை என்று இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ஐரோப்பா மற்றும் வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் இலங்கை பயணிகளை திருப்பி அனுப்பும் நோக்கத்துடன் UL 1213 விமானம் 09 மார்ச் அன்று ரோம் நகருக்கு புறப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால் ரோம் நகருக்கு நேரடியாக பயணிக்க டிக்கெட் முன்பதிவு செய்த பயணிகள் நாட்டிற்கு பயணிக்க முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பரவியுள்ள “இந்த விமானம் ரோமில் சிக்கித்தவித்த ஒரு அமைச்சரை அழைத்து வந்தது” என்ற தகவல் பொய் என்று ஆணையம் வலியுறுத்தியுள்ளது. மேலும், சம்பந்தப்பட்ட அமைச்சர் சில நாட்களுக்கு முன்பு நாட்டிற்கு வந்திருந்தார் என்பதும் அறிக்கையில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக