இரும்பு பாத்திரத்தில் சமைப்பது ஆரோக்கியத்திற்கு பல நன்மைகளை தரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். பழங்காலத்திலிருந்தே பலர் இரும்பு சட்டி அல்லது வாணலியில் சமைக்கும் பழக்கத்தை பின்பற்றி வருகின்றனர். இந்த பாத்திரங்களில் சமைக்கும் உணவு சுவையாக இருப்பதுடன், உடலுக்கு தேவையான இரும்புச் சத்தையும் இயற்கையாக வழங்குகிறது.
ஆனால் எல்லா வகையான காய்கறிகளையும் இரும்பு பாத்திரத்தில் சமைக்க முடியாது. சில காய்கறிகள் மட்டுமே இதில் சமைக்க ஏற்றதாக இருக்கும்.
கீரை வகைகள், கத்திரிக்காய், உருளைக்கிழங்கு, பூசணி, வெண்டைக்காய், பீன்ஸ் போன்ற காய்கறிகளை இரும்பு பாத்திரத்தில் சமைப்பது நல்லது.
மேலும் கடுகு, சீரகம், வெந்தயம் போன்ற பொருட்களுடன் இந்த காய்கறிகளை சமைத்தால் உணவின் சுவையும் அதிகரிக்கும். இதன் மூலம் உடலுக்கு தேவையான இரும்புச் சத்தும் கிடைக்கும்.
அதிக புளிப்பு உள்ள உணவுகளை இரும்பு பாத்திரத்தில் சமைப்பதை தவிர்க்க வேண்டும். தக்காளி, புளி, எலுமிச்சை போன்ற புளிப்பு பொருட்கள் இரும்புடன் எதிர்வினை ஏற்படுத்தி உணவின் சுவை மற்றும் நிறத்தை மாற்றக்கூடும்.
அதேபோல் தயிர் சேர்த்த குழம்புகள் அல்லது தயிர் சார்ந்த உணவுகளையும் இரும்பு சட்டியில் சமைப்பது நல்லதல்ல. இதனால் உணவு கருமையாக மாறுவதுடன் சுவையும் பாதிக்கப்படலாம்.
இரும்பு பாத்திரத்தில் சமைத்தால் உணவில் இயற்கையான இரும்புச் சத்து சேரும். இது உடலில் இரும்பு குறைபாட்டை குறைக்க உதவுகிறது. மேலும் ரசாயன பூச்சுகள் இல்லாததால், ஒட்டாத பாத்திரங்களை விட இது பாதுகாப்பானதாக கருதப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக