BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் மின்தடை தொழிற்சங்க வேலைநிறுத்தம் காரணம்

கொழும்பு மற்றும் கம்பஹா பகுதிகளில் மின்தடை தொழிற்சங்க வேலைநிறுத்தம் காரணம்

கொழும்பு 9, கொழும்பு 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மின்சார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இந்த மின்தடையை வழமை நிலைக்கு கொண்டு வருவதில் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.

இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்த பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் போது முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை என்பதையும் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்த வேலைநிறுத்தம் நேற்று (09) மாலை 3.00 மணிக்கு தொடங்கியதாகவும், இது 24 மணிநேரம் தொடரும் என்றும் மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.

மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் Kosala Abeysinghe தெரிவித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"