கொழும்பு 9, கொழும்பு 14 மற்றும் கம்பஹாவின் சில பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மின்சார தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் தொடர்ச்சியான வேலைநிறுத்தப் போராட்டம் காரணமாக இந்த மின்தடையை வழமை நிலைக்கு கொண்டு வருவதில் சற்று காலதாமதம் ஏற்படக்கூடும் என தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை மின்சார சபையை மறுசீரமைத்த பின்னர் உருவாக்கப்பட்ட புதிய நிறுவனங்களுக்கு ஊழியர்களை இணைக்கும் போது முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படவில்லை என்பதையும் உள்ளிட்ட 8 கோரிக்கைகளை முன்வைத்து இந்த தொழிற்சங்க நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்தம் நேற்று (09) மாலை 3.00 மணிக்கு தொடங்கியதாகவும், இது 24 மணிநேரம் தொடரும் என்றும் மின்சார தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
மேலும் தங்களது கோரிக்கைகளுக்கு தீர்வு கிடைக்காவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் Kosala Abeysinghe தெரிவித்துள்ளார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக