கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கு போதைப்பொருட்களை கடத்தி வந்து விற்பனை செய்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ஆண் மற்றும் பெண் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்தும் 630 போதை மாத்திரைகள் மற்றும் 5 கிராம் 400 மில்லி கிராம் ஹெரோயின் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
போதைப்பொருள் விற்பனையில் ஆண் மற்றும் பெண் ஒருவர் ஈடுபட்டு வருவதாக பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது அவர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் கைது செய்யப்பட்ட இருவரின் உடைமையில் இருந்து போதைப்பொருட்களை மீட்ட பின்னர் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், கொழும்பில் உள்ள ஒரு போதைப்பொருள் வியாபாரியிடமிருந்து போதைப்பொருட்களை வாங்கி வந்து யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்து வந்ததாக அவர்கள் தெரிவித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக