பெண்களின் அழகை அதிகமாக வெளிப்படுத்துவது அவர்களின் கண்களாகும். ஆனால் பலருக்கு கண்களை சுற்றி கருவளையம் தோன்றுவதால் முகம் சோர்வாகவும் சலிப்பாகவும் தெரிகிறது. தூக்கமின்மை, மனஅழுத்தம், அதிக நேரம் மின்னணு சாதனங்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களால் இந்த கருவளையம் உருவாகலாம்.
இந்நிலையில் கண்கள் கீழ் தோன்றும் கருவளையத்தை குறைக்க உதவும் ஒரு எளிய கொரியன் முகப் பேக்கை வீட்டிலேயே தயாரித்து பயன்படுத்தலாம். இந்த இயற்கை முறையை தொடர்ந்து பயன்படுத்தினால் கண்கள் கீழ் இருக்கும் கருவளையம் படிப்படியாக குறைய உதவும்.
தேவையான பொருட்கள்
காபி தூள் – 1 ஸ்பூன்
தேன் – 1 ஸ்பூன்
தண்ணீர் – 1 ஸ்பூன்
தயாரிக்கும் மற்றும் பயன்படுத்தும் முறை
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் காபி தூள், தேன் மற்றும் தண்ணீரை சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சுமார் 10 நிமிடங்கள் வரை நன்றாக கலந்தால் மென்மையான பேஸ்ட் போன்ற கலவை கிடைக்கும்.
அதன்பின் அந்த கலவையை கண்கள் கீழ் இருக்கும் கருவளையம் உள்ள பகுதியில் மெதுவாக தடவ வேண்டும். இதனை இரவு நேரத்தில் தடவி முழு இரவும் அப்படியே விடலாம்.
மறுநாள் காலையில் குளிர்ந்த நீரால் முகத்தை நன்றாக கழுவிக்கொள்ள வேண்டும்.
இந்த கொரியன் முகப் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் கண்கள் கீழ் இருக்கும் கருவளையம் குறைந்து, கண்கள் புத்துணர்ச்சியுடன் அழகாக தோன்ற உதவும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக