BREAKING
இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா? இஸ்ரேலிய குடியேற்றங்களுக்கு எதிராக பிரித்தானியா கடும் நடவடிக்கை? ஆண்டி பர்ன்ஹாம் மீது அதிகரிக்கும் அழுத்தம் காணாமல் ஆக்கப்பட்டோருக்காக யாழில் எழுந்த பிரார்த்தனைகள் கீபோர்டில் ஏன் A-B-C வரிசையில் எழுத்துக்கள் இல்லை? QWERTY பின்னணியில் இருக்கும் சுவாரஸ்ய காரணம்! கிளிநொச்சியில் தொடருந்து மோதி கார் விபத்து - 17 வயது இளம்பெண் உயிரிழப்பு அதிகரித்த ஷோக்கள்... 6 நாட்களில் ‘மொத ராத்திரி’ திரைப்படம் செய்துள்ள வசூல் எவ்வளவு தெரியுமா?

மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கையில் லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை இல்லை தலைவர் உறுதி

மத்திய கிழக்கு பதற்றம்: இலங்கையில் லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை இல்லை தலைவர் உறுதி

மத்திய கிழக்கில் நிலவி வரும் இராணுவ பதற்றமான சூழ்நிலையின்போதும் இலங்கையில் லிட்ரோ எரிவாயு பற்றாக்குறை ஏற்படாது என லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் Channa Gunawardena தெரிவித்துள்ளார்.

ஊடகமொன்றுக்கு நேற்று (08.03.2026) கருத்து தெரிவிக்கும் போது அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறுகையில், சுமார் 30,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் ஒரு கப்பல் தற்போது Maldives பகுதியில் நங்கூரமிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

மேலும் 33,000 மெட்ரிக் தொன் எரிவாயுவை ஏற்றிச் செல்லும் மற்றொரு கப்பல் மார்ச் 17 ஆம் திகதி மாலைத்தீவை வந்தடைய திட்டமிடப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இந்த கப்பல்கள் இலங்கையின் உத்தரவின்படி மாலைத்தீவை வந்தடைந்து, அங்கிருந்து இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சிறிய கப்பல்கள் மூலம் எரிவாயு Sri Lanka நோக்கி கொண்டு வரப்படும் எனவும் அவர் விளக்கமளித்தார்.

மேலும் இதுவரை ஒரு ஓமானி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டிருந்த எரிவாயு விநியோக டெண்டர் இந்த முறை ஒரு அமெரிக்க நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய இராணுவ சூழ்நிலையை கருத்தில் கொண்டு இது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட முடிவாகும் என்றும் சன்ன குணவர்தன குறிப்பிட்டார்.

இந்த எரிவாயு கப்பல்கள் போர் மண்டலம் வழியாக வராது என்றும், அவை அமெரிக்காவிலிருந்து ஆப்பிரிக்கா வழியாக பயணித்து மாலைத்தீவை வந்தடைவதால், மத்திய கிழக்கில் நிலவும் இராணுவ சூழ்நிலையால் இலங்கையில் எரிவாயு விநியோகத்தில் எந்த தடையும் ஏற்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"