குவைத் தலைநகரில் அமைந்துள்ள தனது தூதரகத்தின் அனைத்துப் பணிகளையும் அமெரிக்க வெளியுறவுத்துறை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "அமெரிக்க பணியாளர்கள் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், வெளிநாடுகளில் உள்ள அமெரிக்கர்களின் பாதுகாப்பே எங்களது முதன்மையான முன்னுரிமை" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க குடிமக்களுக்கான எச்சரிக்கை
தூதரகம் தற்போது செயல்பாட்டில் இல்லாததால், குவைத்தில் வசிக்கும் அனைத்து அமெரிக்க குடிமக்களையும் வணிக ரீதியான அல்லது கிடைக்கக்கூடிய இதர போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தி உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியேற முடியாத நிலையில் உள்ள குடிமக்களைத் தங்களின் இருப்பிடங்களிலேயே பாதுகாப்பாக இருக்குமாறும், தேவையின்றி வெளியில் வருவதைத் தவிர்க்குமாறும் அமெரிக்க வெளியுறவுத்துறை எச்சரித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக