பொதுவாக வயது அதிகரிக்கும் போது முகத்தில் சுருக்கங்கள் தோன்றுவது இயல்பான ஒன்றாகும். அதிக நேரம் வெயிலில் இருப்பது, சருமத்தை சரியாக பராமரிக்காதது, தூக்கமின்மை போன்ற காரணங்களாலும் முகத்தில் சுருக்கங்கள் ஏற்படலாம்.
இந்நிலையில், வீட்டிலேயே எளிதாக கிடைக்கும் இரண்டு பொருட்களை பயன்படுத்தி முகத்தில் ஏற்படும் சுருக்கங்களை குறைக்கலாம்.
தேங்காய் எண்ணெய் – ½ ஸ்பூன்
ரோஸ் வாட்டர் – 1 ஸ்பூன்
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் தேங்காய் எண்ணெய் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும்.
பின்னர் அந்த கலவையை முகத்தில் மெதுவாக தடவி சில நிமிடங்கள் அப்படியே வைக்கவும். அதன்பிறகு முகத்தை மெதுவாக மசாஜ் செய்து, பின்னர் தண்ணீரால் கழுவலாம்.
இந்த முறையை காலை குளிப்பதற்கு முன்பு பயன்படுத்துவது சிறந்தது.
இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், சருமத்தில் இரத்த ஓட்டம் மேம்பட்டு முகத்தில் ஏற்படும் சுருக்கங்கள் குறைய உதவும் என கூறப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக