இலங்கை மக்களின் வாய்வழி சுகாதார நிலையை மதிப்பீடு செய்வதற்காக, மார்ச் 10, 2026 முதல் ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதாரக் கணக்கெடுப்பு முன்னெடுக்கப்படவுள்ளது. உலக சுகாதார நிறுவனத்தின் பரிந்துரைக்கமைய, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இக்கணக்கெடுப்பு மார்ச் முதல் நவம்பர் வரை நாடளாவிய ரீதியில் இடம்பெறவுள்ளது. பாடசாலை மாணவர்கள் மற்றும் முதியவர்கள் உள்ளிட்ட அனைத்து வயதினரையும் உள்ளடக்கித் தகவல்கள் திரட்டப்படவுள்ளன. எதிர்கால சுகாதாரக் கொள்கைகளை வகுப்பதற்கும், நோய்த் தடுப்புத் திட்டங்களைத் திட்டமிடுவதற்கும் தேவையான முக்கிய தரவுகளைப் பெறுவதே இதன் பிரதான நோக்கமாகும். பொதுமக்கள் இது குறித்து விழிப்புணர்வுடன் இருக்குமாறு சுகாதார அமைச்சின் பல் மருத்துவ சேவைகள் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.
செய்திகள்
ஐந்தாவது தேசிய வாய்வழி சுகாதார கணக்கெடுப்பு: மார்ச் முதல் ஆரம்பம்!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக