ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளது. உலகின் பல நாடுகளுடன் ஒப்பிடும்போது, ஈரானில் பெட்ரோல் மிகவும் குறைந்த விலையில் கிடைப்பதாக கூறப்படுகிறது.
தற்போது ஈரானில் ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை சுமார் 2 முதல் 5 ரூபாய் வரை மட்டுமே இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஈரான் உலகில் அதிக அளவில் எண்ணெய் இருப்பு கொண்ட நாடுகளில் ஒன்றாகும். இதனால் அவர்கள் பெட்ரோல் தேவைக்காக மற்ற நாடுகளிடம் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய அவசியம் குறைவாக உள்ளது.
மேலும், ஈரானிய அரசாங்கம் தனது மக்களுக்கு உலகிலேயே அதிகளவில் எரிபொருள் மானியம் வழங்கும் நாடாகவும் கருதப்படுகிறது. இதன் காரணமாக அந்நாட்டில் பெட்ரோல் மிகவும் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
இதேவேளை, தற்போதைய சூழலில் ஈரான் – இஸ்ரேல் இடையே அதிகரித்து வரும் பதற்றம் உலகளாவிய எண்ணெய் சந்தையிலும் தாக்கத்தை ஏற்படுத்தும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
இந்த போர் நிலைமை தொடர்ந்து நீடித்தால், உலக சந்தையில் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்கும் வாய்ப்பும் இருப்பதாக கூறப்படுகிறது.
மற்றபுறம், இந்தியா தனது எண்ணெய் தேவையின் சுமார் 80 சதவீதத்தை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்து வருகிறது. எனவே உலக சந்தையில் எண்ணெய் விலை உயர்ந்தால் அதன் தாக்கம் இந்தியாவிலும் அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்படுகிறது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக