வாதுவ ரயில் நிலையத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்ற தகவல் தொழில்நுட்ப நிபுணர் ஒருவர் ரயிலில் மோதி உயிரிழந்துள்ளதாக வாதுவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் வாதுவ பாலிகா வீதியில் வசிக்கும் 42 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தை என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
அளுத்கமவிலிருந்து மருதானை நோக்கி சென்று கொண்டிருந்த ரயில் இன்று காலை வாதுவ ரயில் நிலையத்தில் சிறிது நேரம் நின்ற பின்னர் மீண்டும் பயணத்தைத் தொடங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
அந்த நேரத்தில் ஓடும் ரயிலில் ஏற முயன்றபோது அவர் தவறி விழுந்து ரயிலில் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் வாதுவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக