புதிய அனுராதபுரம் மற்றும் வவுனியா மின் விநியோகப் பாதைகளில் ஏற்பட்ட திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இன்று நாட்டின் பல பகுதிகளில் மின்சாரம் தடைப்பட்டதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இந்தத் தொழில்நுட்பக் கோளாறினால் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதியின் அதிர்வெண்ணில் (Frequency) ஏற்பட்ட மாற்றம் காரணமாக, களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் நிலையத்தின் நீராவி விசையாழி (Steam Turbine) செயலிழந்து கட்டமைப்பிலிருந்து துண்டிக்கப்பட்டது. இதன் விளைவாகத் தேசிய மின் கட்டமைப்புத் தொகுதிக்குக் கிடைக்க வேண்டிய 55 மெகாவாட் மின்சாரக் கொள்ளளவு இழக்கப்பட்டதால் இந்த மின்தடை ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மின்சார சபை பொறியியலாளர்களின் துரித நடவடிக்கையினால் சில நிமிடங்களிலேயே நிலைமை சீர்செய்யப்பட்டு, மின் விநியோகம் மீண்டும் வழமைக்குக் கொண்டுவரப்பட்டதாக மின்சார சபை மேலும் உறுதிப்படுத்தியுள்ளது.
செய்திகள்
தேசிய மின் கட்டமைப்பில் கோளாறு: நாட்டின் பல பகுதிகளில் மின்தடை!
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக