மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழல் மற்றும் சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள பொருளாதார மாற்றங்கள் காரணமாக, இன்று (05.03.2026) தங்கம் மற்றும் வெள்ளியின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. இதன்படி, சர்வதேச சந்தையில் ஒரு அவுண்ஸ் தங்கத்தின் விலை 5,175 டொலராக உயர்ந்துள்ளதுடன், வெள்ளி ஒரு அவுண்ஸ் 84.96 டொலராக விற்பனை செய்யப்படுகிறது. அமெரிக்க டொலரின் வலுவூட்டல் மற்றும் மத்திய கிழக்கில் ஈரானியக் கப்பல் மீதான அமெரிக்கத் தாக்குதலால் ஏற்பட்டுள்ள அரசியல் ஸ்திரமற்ற நிலை ஆகியவையே இந்த விலை மாற்றத்திற்கு பிரதான காரணங்களாகக் கூறப்படுகின்றன. சர்வதேச சந்தையில் ஏற்பட்டுள்ள இந்த விலை உயர்வு காரணமாக, இலங்கை உள்ளிட்ட உள்ளூர் சந்தைகளிலும் தங்கத்தின் விலை இன்று மேலும் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கைக்கு அருகில் மூழ்கடிக்கப்பட்ட ஈரானியக் கப்பலில் இருந்து 84 உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாக வெளியான தகவல்கள் ஒருபுறம் இருக்க, கடற்படையினர் இத்தகவல்களை மறுத்துள்ளதாகவும் முரண்பட்ட செய்திகள் வெளியாகியுள்ளன. எவ்வாறாயினும், சர்வதேச அரசியல் நகர்வுகள் காரணமாக மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகளும் தொடர்ந்து ஏறுமுகத்திலேயே காணப்படுகின்றன.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக