BREAKING
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

மத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து!

மத்திய கிழக்கு போர் பதற்றம்: ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைகள் இரத்து!

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர் பதற்றம் மற்றும் வான்பரப்பு கட்டுப்பாடுகள் காரணமாக, ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் இன்று (05) ரியாத் மற்றும் துபாய்க்கான தனது விமான சேவைகளை இரத்து செய்துள்ளது. இதன்படி, கொழும்பிலிருந்து துபாய் செல்லவிருந்த UL 225, அங்கிருந்து திரும்பவிருந்த UL 226 மற்றும் ரியாத் நோக்கிய UL 265, UL 266 ஆகிய வானூர்தி சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன. ஐக்கிய அரபு அமீரகம் தனது வான்வெளியைத் தற்காலிகமாகத் திறந்திருந்த போதிலும், நிலவும் அசாதாரண சூழ்நிலையைக் கருத்திற்கொண்டு இந்தப் பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பயணிகள் மேலதிக விபரங்களுக்கு 1979 என்ற 24 மணிநேரத் தொடர்பு மையத்தை அழைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதேவேளை, தடைகளுக்கு மத்தியிலும் நேற்று துபாய்க்கு 4 விமானங்கள் இயக்கப்பட்டதோடு, இன்று அதிகாலை மஸ்கட்டிலிருந்து ஃபிட்ஸ் ஏர் மற்றும் ஸ்மார்ட் விங்ஸ் விமானங்கள் 133 பயணிகளுடன் கட்டுநாயக்கவை வந்தடைந்தன. மேலும், துபாயிலிருந்து எமிரேட்ஸ் மற்றும் ஃபிளை துபாய் விமானங்கள் இன்று மாலை வருகை தரத் திட்டமிடப்பட்டுள்ளன. ஒருபுறம் வான்வழிப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ள நிலையில், கடற்பரப்பில் அமெரிக்கத் தாக்குதலில் மூழ்கிய ஈரானியக் கப்பலில் இருந்து இதுவரை 84 உடல்கள் மீட்கப்பட்டுள்ளமை பிராந்தியத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"