இன்றைய காலகட்டத்தில் இளநரை, நரைமுடி போன்ற பிரச்சனைகள் பலருக்கும் ஏற்படுகிறது. இதற்கான இயற்கை தீர்வாக வீட்டிலேயே கருப்பு எண்ணெய் தயாரித்து பயன்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம் – 2 ஸ்பூன்
வெள்ளை எள்ளு – 2 ஸ்பூன்
கறிவேப்பிலை – 2 கொத்து
தேங்காய் எண்ணெய் – 1 கப்
தயாரிப்பு முறைகள்:
ஒரு வாணலில் வெந்தயம், வெள்ளை எள்ளு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கருப்பாகும் வரை வறுத்து எடுத்துக்கொள்ளவும்.
இதனை ஆறவைத்து, மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு பொடியாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த பொடி மற்றும் தேங்காய் எண்ணெயை ஒரு பாட்டிலில் கலந்து, ஒரு நாள் முழுக்க அதே நிலையில் வைக்கவும்.
பயன்பாடு:
தலைமுடியில் இந்த எண்ணெயை நன்கு தடவி மசாஜ் செய்யவும்.
ஒரு மணி நேரம் அதே நிலையில் வைக்கவும்.
பின்னர் மென்மையான ஷாம்பு கொண்டு தலைமுடியை அலசி சுத்தம் செய்யலாம்.
வாரத்திற்கு ஒரு முறை தொடர்ந்து பயன்படுத்தினால், நரைமுடி நிரந்தரமாக கருமையாக மாறும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக