அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது ‘ட்ரூத்’ சமூக ஊடகக் கணக்கின் மூலம் ஈரான் அரசாங்கத்தை குறிவைத்து கடுமையான கருத்துகளை வெளியிட்டுள்ளார். அதில், “அவர்களது வான் பாதுகாப்பு அமைப்புகள், விமானப்படை, கடற்படை மற்றும் தலைமைத்துவம் இப்போது முடிவுக்கு வந்துவிட்டன” என்று பதிவிட்டுள்ளார்.
இந்தக் கருத்துடன் இணைத்து, வொஷிங்டன் போஸ்ட் பத்திரிகையில் வெளியான “ட்ரம்ப் கோட்பாட்டின் பிறப்பு” என்ற கட்டுரையையும் அவர் மேற்கோள் காட்டியுள்ளார். இதன் மூலம் தனது வெளிநாட்டு கொள்கை நிலைப்பாட்டை வலியுறுத்தும் முயற்சியாக இந்த பதிவு பார்க்கப்படுகிறது.
ஈரான் அதிகாரிகள் அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முயற்சித்து வருவதாக குறிப்பிட்டுள்ள ஜனாதிபதி ட்ரம்ப், “அவர்கள் பேச விரும்புகிறார்கள். நான் ‘மிகவும் தாமதமாகிவிட்டது’ என்று கூறினேன்” எனவும் தெரிவித்துள்ளார்.
பிராந்திய மோதல்கள் தீவிரமடைந்துள்ள சூழ்நிலையில் வெளியிடப்பட்ட இந்த அறிக்கை, ஈரான் விவகாரத்தில் ட்ரம்ப் கடுமையான அணுகுமுறையைப் பின்பற்றுகின்றார் என்பதைக் காட்டுவதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக