மத்திய கிழக்கில் நிலவும் பாதுகாப்பற்ற சூழ்நிலை காரணமாக விமான பயணங்கள் தொடர்பான தகவல்களை அறிந்து கொள்ள ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனம் பல விசேட தொலைபேசி எண்களை அறிமுகப்படுத்தியுள்ளது.
இலங்கைக்குள் இருந்து தொடர்புகொள்ள விரும்பும் பயணிகள் 1979 என்ற சிறப்பு இலக்கத்தின் ஊடாகவும், +94 11 777 1979 என்ற தொலைபேசி எண்ணின் ஊடாகவும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என நிறுவனம் தெரிவித்துள்ளது.
சர்வதேச அழைப்புகளுக்கு வட்ஸ்அப் சேவையின் மூலம் மட்டுமே தகவல்களை பெற முடியும் என்றும், அதற்காக +94 74 444 1979 என்ற எண் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், விமான டிக்கெட்டுகளை பெற்றுக்கொண்ட பயண முகவர் அல்லது நிறுவனத்தின் உத்தியோகப்பூர்வ இணையதளத்தை அணுகி மேலதிக தகவல்களை பெறுமாறு பயணிகளிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மத்திய கிழக்கில் நிலவும் போர் நிலைமை மற்றும் சில நாடுகளில் விமான எல்லைகள் மூடப்பட்டுள்ளமை காரணமாக, நேற்று மத்திய கிழக்கிற்கான அனைத்து விமானங்களையும் இரத்து செய்ய நிறுவனம் முடிவு செய்துள்ளது. பயணிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும், பிராந்திய நிலைமையை தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும் நிறுவனம் தெரிவித்துள்ளது.
அதன்படி, கொழும்பு – டுபாய், டுபாய் – கொழும்பு, கொழும்பு – குவைத், குவைத் – கொழும்பு, கொழும்பு – தோஹா, தோஹா – கொழும்பு, கொழும்பு – தம்மாம், தம்மாம் – கொழும்பு, கொழும்பு – ரியாத் மற்றும் ரியாத் – கொழும்பு ஆகிய பயணங்களுக்கு ஒதுக்கப்பட்ட பல விமான எண்களைக் கொண்ட சேவைகள் நேற்று இரத்து செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக