கொழும்பு–பிலியந்தலை பிரதான வீதியில் சிறிய லாரி ஒன்றும் பாடசாலை மாணவர்களை ஏற்றிச் சென்ற வான் ஒன்றும் விபத்தில் சிக்கியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ரத்தனபிட்டிய பகுதியில் இடம்பெற்ற இந்த விபத்தில், இரு வாகனங்களும் மோதியதையடுத்து சாலையோரத்தில் இருந்த மின் கம்பத்தில் மோதியதாக ஆரம்பக் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வாகன விபத்தினால் அந்தப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், பிலியந்தலையிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் 120வது வீதியின் போக்குவரத்து பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக