BREAKING
வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது! வெயில் காலத்தில் தவிர்க்க வேண்டிய உணவுகள் என்னென்ன? – உடல்நலத்தை பாதுகாக்க முக்கிய அறிவுரை யாழில் ஐஸ் போதைப்பொருளுடன் மூன்று இளைஞர்கள் கைது – இரகசிய தகவலால் வெளிச்சத்துக்கு வந்த வியாபாரம் வெந்நீருடன் சாப்பிட்டால்தான் மாத்திரைகளின் முழு பயன் கிடைக்குமா? – 5 முக்கிய கேள்விகள் & பதில்கள் Vijay படத்திற்கு பெரிய அதிர்ச்சி: Jana Nayagan லீக் வழக்கில் எடிட்டர் கைது! 12 நாட்களில் ₹60 கோடி மட்டுமா? Love Insurance Kompany வசூல் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது!

யாழ்ப்பாணத்தில் டீசல் பதுக்கல்: இருவர் கைது, லீட்டர் பறிமுதல்

யாழ்ப்பாணத்தில் டீசல் பதுக்கல்: இருவர் கைது, லீட்டர் பறிமுதல்

யாழ்ப்பாணம் ஏழாலை பகுதியில் டீசலை பதுக்கி வைத்திருந்த இருவர் இன்று அதிகாலை சுன்னாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். டீசல் சட்டவிரோதமாக சேமித்து வைக்கப்பட்டுள்ளதாக சுன்னாகம் காவல்துறை பொறுப்பதிகாரிக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த திடீர் சோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

சோதனையின் போது சந்தேகநபர்கள் வசமிருந்த 800 லீட்டர் டீசல் மற்றும் அதனை பதுக்குவதற்காக பயன்படுத்தப்பட்ட வாகனம் என்பன காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு நிலவும் சூழ்நிலையில் சட்டவிரோதமாக எரிபொருள் சேமித்து விற்பனை செய்ய முயன்றதாக ஆரம்பக் கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரு சந்தேகநபர்களையும் மல்லாகம் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"