ஆண் பெண் இருவருக்கும் முடி அழகை அதிகரிக்க எண்ணெய் தடவுவது மிகவும் பயனுள்ளதாகும். ஆனால் அதை எப்போது செய்வது சிறந்தது என ஒரு குழப்பம் பலருக்கும் உண்டாகும். இதோ அந்த பரிந்துரைகள்:
வாரத்தில் ஒரோ இரண்டு முறை இரவு நேரத்தில் தலைக்கு எண்ணெய் தடவலாம்.
சிலர் எண்ணெய் சுரப்புத்தன்மை அதிகமாக இருக்கும்; அவர்கள் காலை நேரத்தில் எண்ணெய் தடவி குளிப்பது மிகவும் பயனுள்ளதாக அமையும்.
தலை சருமம் சுறுசுறுப்பாக இருக்கும், முடி வறட்சி குறைகிறது.
எண்ணெய் தடவியபின் 30 நிமிடம் முதல் 2 மணி நேரம் வரை வைத்திருப்பது, அதிக எண்ணெய் சேர்வதை தடுக்கும்.
முகப்பரு பிரச்சனை அல்லது எண்ணெய் பசைத்தன்மை கொண்டவர்கள் காலை நேரத்தில் எண்ணெய் தடவுவது நல்ல பலனளிக்கும்.
எச்சரிக்கை: வெளியில் செல்வதற்கு முன் எண்ணெய் தடவினால், தூசி மற்றும் அழுக்கு முடியில் ஒட்டக்கூடும். வெயில் காலங்களில் தலை சருமத்தில் அழுக்குகள் சேரும் வாய்ப்பு உள்ளது.
பரிந்துரை: காலை எண்ணெய் தடப்போர்வர்கள் சிறிது நேரம் மசாஜ் செய்து பிறகு ஷாம்பு வைத்து குளிக்க வேண்டும்.
நீண்ட நேரம் ஊட்டம் அளிக்கும், உலர்ந்த மற்றும் சேதமடைந்த முடியை சீரமைக்க உதவும்.
மன அழுத்தம் குறைய, நல்ல உறக்கம் கிடைக்கும்.
எச்சரிக்கை: எண்ணெய் சுரப்புத்தன்மை அதிகம் உள்ளவர்கள், அடிக்கடி இரவு எண்ணெய் தடவினால் பொடுகு பிரச்சனை ஏற்படும்.
சிறந்த பரிந்துரை: வறண்ட தலைமுடி மற்றும் சேதம் அடைந்த முடி கொண்டவர்கள் மட்டுமே இரவு நேரத்தில் எண்ணெய் தடவுவது நல்லது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக