இந்த ஆண்டின் ஆரம்பத்தில் வெளிநாட்டுத் தொழிலாளர்களின் பணப் பரிமாற்றம் மற்றும் சுற்றுலா வருமானம் ஆகியவற்றின் வளர்ச்சியால் இலங்கையின் பொருளாதாரம் வலுவடைந்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி (CBSL) வெளியிட்ட பொருளாதார ஆராய்ச்சி அறிக்கை தெரிவிக்கிறது.
2026 ஜனவரி மாதத்தில் வெளிநாடுகளில் பணியாற்றும் இலங்கையர்களிடமிருந்து 751 மில்லியன் அமெரிக்க டொலர்கள் நாட்டுக்குக் கிடைத்துள்ளது.
இது கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் 31.1% வளர்ச்சி என அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2026 ஜனவரியில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்து, அதன் மூலம் நாட்டில் ஈட்டப்பட்ட வருமானம் 378 மில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆகும்.
ஜனவரி இறுதியில் இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 6.8 பில்லியன் அமெரிக்க டொலர்கள் ஆக பதிவாகியுள்ளது.
ஏற்றுமதி வளர்ச்சி இறக்குமதியை விட அதிகமாக இருந்ததால் வர்த்தக பற்றாக்குறை குறைந்துள்ளது.
எனினும், இறக்குமதி விலை அதிகரித்ததால் வர்த்தக விதிமுறைகள் சற்றே சரிவடைந்துள்ளன.
2026 ஜனவரியில் வாகன இறக்குமதிக்காக 224 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டுள்ள நிலையில், இது டிசம்பர் மாதத்துடன் (301 மில்லியன் டொலர்) ஒப்பிடுகையில் குறைவாகும்.
அரசாங்கப் பிணையங்கள் சந்தையில் 17 மில்லியன் டொலர் முதலீடு உள்ளீர்க்கப்பட்டுள்ள நிலையில், கொழும்பு பங்குச் சந்தையிலிருந்து 22 மில்லியன் டொலர் வெளிநாட்டு முதலீடுகள் வெளியேறியுள்ளன.
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் மதிப்பு 2026 ஆம் ஆண்டின் இதுவரையிலான காலப்பகுதியில் 0.2% வலுவடைந்துள்ளது.
இவ்வாறு வெளிநாட்டு பணப்பரிமாற்றம், சுற்றுலா வருமானம் மற்றும் வலுவான ஏற்றுமதி வளர்ச்சி மூலம் இலங்கையின் பொருளாதார நிலைமை மேம்பட்டுள்ளதாக அறிக்கை தெரிவித்துள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக