பொலிவிய விமானப்படையின் ஒரு சரக்கு விமானம் எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தில் விபத்துக்குள்ளானதில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர், அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
விபத்து நடந்தது வெள்ளிக்கிழமை (27), உள்ளூர் நேரப்படி மாலை 6:20 மணிக்கு (22:20 GMT).
விமானம் சாண்டா குரூஸ் நகரத்திலிருந்து புறப்பட்டு எல் ஆல்டோ சர்வதேச விமான நிலையத்தை நோக்கி வந்தபோது ஓடுபாதையில் இருந்து விலகிச் சென்று அருகிலுள்ள மோட்டார் பாதையில் இருந்த வாகனங்களுக்கு வீழ்ந்தது.
இந்த சம்பவத்தால் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டது.
குறைந்தது 15 பேர் பலி, மேலும் சிலர் காயமடைந்துள்ளதாக கூறப்படுகிறது.
விபத்து தொடர்பான விசாரணைகள் உடனடியாக தொடங்கப்பட்டுள்ளன.
இந்த சம்பவம் பொலிவியாவில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக