அக்கரைப்பற்று யுவதி ஒருவர், அதே பகுதியைச் சேர்ந்த 46 வயதுடைய திருமணம் செய்யாத நபர் ஒருவர் நீண்டகாலமாக தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளை வழங்கி வந்ததாக புகார் செய்துள்ளார். பாதிக்கப்பட்ட யுவதி அக்கரைப்பற்று பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின்படி, அக்கரைப்பற்று பொலிஸார் உடனடியாகச் செயற்பட்டு, நேற்று (27) சந்தேகநபரை அவரது இல்லத்தில் வைத்து கைது செய்தனர்.
போலீசார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில், சந்தேகநபர் அந்தப் பகுதியில் உள்ள பல பெண்களுக்கு நீண்டகாலமாக பாலியல் தொந்தரவுகளை கொடுத்து வந்துள்ளார் என்பதும் தெரியவந்துள்ளது.
சந்தேகநபரை மேலதிக விசாரணைகளுக்குப் பிறகு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக