ஸ்பெயின் அரசு சுமார் 500,000 புலம்பெயர் மக்களுக்கு குடியுரிமை வழங்க முடிவு செய்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம் குற்றப் பதிவு இல்லாத வெளிநாட்டவர்கள், குறைந்தது ஐந்து மாதங்கள் ஸ்பெயினில் வசித்திருக்க வேண்டும். ஒப்புதல் பெற்றவர்கள் சட்டப்படி வேலை செய்யும் உரிமையையும், ஒரு வருட வதிவிட அனுமதியையும் பெறுவர், இது நீட்டிக்கப்படலாம்.
ஸ்பெயின் பிரதமர் Pedro Sánchez இதை தொழிலாளர் பற்றாக்குறை மற்றும் பொருளாதார மீட்பு நடவடிக்கை என்று விளக்கினார். பாகிஸ்தான் துணைத் தூதரகத்தில் நூற்றுக்கணக்கான ஆண்கள் குற்றமற்ற தன்மையை நிரூபிக்கும் சான்றிதழ்களை பெற்றனர்.
ஆனால் எலோன் மஸ்க் இதற்கு எதிராக கடும் விமர்சனம் எழுப்பி, ஸ்பெயின் பிரதமர் அரசியல் ஆதாயத்திற்காக இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளார் எனக் குற்றஞ்சாட்டியுள்ளார். அதற்கு பதிலாக ஸ்பெயின் பிரதமர், மானுடரசினால் முடியாத சில திட்டங்களை மஸ்க் முன்னெடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
இந்த திட்டம் தொழிலாளர்களை ஈர்த்து, நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முயற்சி என்றும், நமது நாட்டிற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க நாள் என்றும் புலம்பெயர் அமைச்சர் Elma Saiz தெரிவித்தார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக