யாழ்ப்பாணம் தையிட்டி பகுதியில் விகாரை அமைந்துள்ள இடம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள தங்களுக்குச் சொந்தமான காணிகளை மீளக் கையளிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் இரண்டாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குறித்த போராட்டம் கடந்த 27ஆம் திகதி முன்னெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விகாரை அமைந்துள்ள பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள தனியார் காணிகளை எந்தவித தாமதமுமின்றி உரிய காணி உரிமையாளர்களிடம் மீள வழங்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
காணி உரிமையாளர்கள் ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் தொடர்ச்சியாக இந்தப் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் நேற்று மாலை வரை இரண்டு நாட்களாகத் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தங்களுக்குரிய சொந்தக் காணிகள் முழுமையாக மீள வழங்கப்படும் வரை இந்தப் போராட்டத்தை தொடர்ச்சியாக முன்னெடுக்கப் போவதாக காணி உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக