கிளிநொச்சி - யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வீதியில் அமைந்துள்ள தொடருந்துக் கடவையில் இடம்பெற்ற விபத்தில் 17 வயதுடைய இளம்பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த தொடருந்து, தொடருந்துக் கடவையை கடக்க முற்பட்ட காருடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் போது காரில் பயணித்த 17 வயதுடைய இளம்பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், காரில் இருந்த இருவர் படுகாயமடைந்த நிலையில் மீட்கப்பட்டு சிகிச்சைகளுக்காக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக