சிக்கன் பிரியர்களுக்கு வித்தியாசமான சுவையில் ஒரு புதிய அனுபவத்தை தரும் காரசாரமான மசாலா சிக்கன் கிரேவி ரெசிபி தற்போது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது. வீட்டிலேயே எளிதாக தயாரிக்கக்கூடிய இந்த கிரேவி, புதிதாக அரைத்த மசாலாவின் நறுமணம் மற்றும் காரசாரமான சுவையால் ரெஸ்டாரண்ட் தரத்தை நினைவூட்டும்.
பிரியாணி, சாதம், இடியாப்பம், தோசை, சப்பாத்தி, பரோட்டா என எந்த உணவுடனும் இந்த மசாலா சிக்கன் கிரேவி சிறப்பாக பொருந்தும்.
முதலில் சிக்கனை நன்றாக சுத்தம் செய்து, தயிர், மஞ்சள் தூள், மல்லித்தூள், காஷ்மீரி மிளகாய்த்தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து 15 நிமிடங்கள் ஊறவைக்க வேண்டும்.
பின்னர் வரமிளகாய், காஷ்மீரி வரமிளகாய், சோம்பு, மிளகு மற்றும் சீரகத்தை லேசாக வறுத்து, ஆறியதும் நன்றாக அரைத்து மசாலா தயாரிக்க வேண்டும்.
அடுத்து கடாயில் எண்ணெய் ஊற்றி வெங்காயம் மற்றும் கறிவேப்பிலையை பொன்னிறமாக வதக்கி, இஞ்சி-பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கிளற வேண்டும். பின்னர் தக்காளி சேர்த்து மென்மையாகும் வரை சமைக்க வேண்டும்.
அதன்பிறகு ஊறவைத்த சிக்கனை சேர்த்து சில நிமிடங்கள் வதக்கி, அரைத்த மசாலா மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கலக்க வேண்டும். சிக்கனில் இருந்து இயற்கையாக வெளிவரும் நீருடன் மிதமான தீயில் 10 முதல் 15 நிமிடங்கள் சமைத்தால் கிரேவி சுண்டி கெட்டியாகும்.
இறுதியில் சிறிதளவு தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலையை தாளித்து கிரேவியில் சேர்த்தால், கூடுதல் மணமும் சுவையும் கிடைக்கும்.
இந்த காரசார மசாலா சிக்கன் கிரேவி:
ஆகியவற்றுடன் மிகவும் சுவையாக இருக்கும்.
வீட்டில் கிடைக்கும் சாதாரண பொருட்களைக் கொண்டு எளிதில் தயாரிக்கக்கூடிய இந்த மசாலா சிக்கன் கிரேவி, குடும்ப விருந்துகள் மற்றும் வார இறுதி மதிய உணவிற்கு சிறந்த தேர்வாக அமையும்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக