BREAKING
வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு வடக்கு கிழக்கில் பாதுகாப்பு படைகள் கையகப்படுத்திய மக்களின் காணிகளை விடுவியுங்கள்.. பிரதமரிடம் யாழில் மஜகர் கையளிப்பு. சிறுவர்களின் போஷாக்கான உணவு ஆரோக்கியமான வாழ்வு நடைபவணி கிளிநொச்சியில் வேர்ல்ட் விஷன் லங்கா ஏற்பாட்டில் இன்று வெள்ளிக்கிழமை மாலை இடம்பெற்றது. அநுர அரசே! தமிழ் மக்களை ஏமாற்றாதே! மக்களின் காணிகளை மக்களுக்கு கொடு புது கண்டி வீதியில் கோர விபத்து: 7 வயது சிறுமி உட்பட மூவர் உயிரிழப்பு ஷிரான் பாசிக்கின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை: வங்கிக் கணக்குகள் தொடர்பில் விசாரணைக்கு உத்தரவு

ஹரியானாவில் மாத கர்ப்பிணி மனைவி கொலை; தலைமறைவான கணவரை தேடும் பொலிஸார்

ஹரியானாவில் மாத கர்ப்பிணி மனைவி கொலை; தலைமறைவான கணவரை தேடும் பொலிஸார்

இந்தியாவின் ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத் பகுதியில் ஆறு மாத கர்ப்பிணியான பெண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த வழக்கில் அவரது கணவர் மீது கொலை சந்தேகம் எழுந்துள்ள நிலையில், அவரை பொலிஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்.

பொலிஸார் தெரிவித்த தகவலின்படி, 26 வயதான அமித் குப்தா தனது 23 வயதான மனைவி நேஹா குமாரியுடன் வசித்து வந்துள்ளார். கடந்த சில நாட்களாக அவர் வேலைக்குச் செல்லும் போது, மனைவியை வீட்டிற்குள் பூட்டி வைத்துச் சென்றதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சம்பவம் நடைபெற்ற நாளன்று, அமித் குப்தா தனது உறவினருக்கு தொலைபேசியில் அழைத்து, மனைவியை கொன்றுவிட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது. உடனடியாக சம்பவ இடத்திற்கு சென்ற உறவினர், நேஹா உயிரிழந்த நிலையில் கிடந்ததை அடுத்து பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

ஆரம்பக்கட்ட விசாரணைகளின்படி, வீட்டிலிருந்த தண்ணீர் நிரப்பப்பட்ட வாளியில் நேஹாவின் முகத்தை அமுக்கி கொலை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. உயிரிழந்த பெண்ணின் உடல் உடற்கூறு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதுடன், சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவான அமித் குப்தாவை கைது செய்ய பொலிஸார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். மனைவிக்கு வேறொருவருடன் தொடர்பு இருப்பதாக கணவர் சந்தேகித்ததே இந்தச் சம்பவத்திற்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸார் ஆரம்பக்கட்ட விசாரணையின் அடிப்படையில் தெரிவித்துள்ள நிலையில், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"