BREAKING
தினமும் புஷ்-அப்ஸ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? அடிக்கடி தலைசுற்றுகிறதா? சாதாரணம் என அலட்சியம் வேண்டாம்; பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள் இதோ! 15 வீத பேருந்துக் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல் ஊறுகாய் தகராறால் கொடூரம்: 15 வயது மாணவி தோழியை கத்தியால் தாக்கி கைது ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தலிபான் அரசு தடை தினமும் புஷ்-அப்ஸ் செய்வதால் கிடைக்கும் நன்மைகள் என்ன தெரியுமா? அடிக்கடி தலைசுற்றுகிறதா? சாதாரணம் என அலட்சியம் வேண்டாம்; பின்னால் இருக்கும் முக்கிய காரணங்கள் இதோ! 15 வீத பேருந்துக் கட்டண உயர்வுக்கு அனுமதி கோரி தனியார் பேருந்து உரிமையாளர்கள் வலியுறுத்தல் ஊறுகாய் தகராறால் கொடூரம்: 15 வயது மாணவி தோழியை கத்தியால் தாக்கி கைது ஆப்கானிஸ்தானில் அரசு அதிகாரிகளுக்கு ஸ்மார்ட்போன் பயன்படுத்த தலிபான் அரசு தடை

இணைய முதலீட்டு மோசடிகள் அதிகரிப்பு: இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இணைய முதலீட்டு மோசடிகள் அதிகரிப்பு: இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை

இணையத்தின் ஊடாக நடைபெறும் முதலீட்டு மோசடிகள் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு பிரிவு பொதுமக்களுக்கு அவசர எச்சரிக்கை விடுத்துள்ளது.

குறிப்பாக, குறுகிய காலத்தில் அதிக இலாபம் கிடைக்கும் எனக் கூறப்படும் இணையவழி முதலீட்டு திட்டங்களை நம்பி, ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் வாழ்நாள் சேமிப்புகளை முதலீடு செய்ய வேண்டாம் என அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

மேலும், வயதான பெற்றோர்கள் மற்றும் தனிமையில் வாழும் உறவினர்கள் இத்தகைய இணைய மோசடி கும்பல்களின் பிரதான இலக்குகளாக மாறி வருவதால், அவர்களின் நிதி மற்றும் முதலீட்டு நடவடிக்கைகள் குறித்து குடும்பத்தினரும் இளைய தலைமுறையினரும் விழிப்புடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இவ்வகை இணைய முதலீட்டு மோசடி சம்பவங்கள் அண்மைக்காலமாக அதிகரித்து வரும் நிலையில், சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும், சந்தேகத்திற்கிடமான முதலீட்டு திட்டங்களில் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்றும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"