இலங்கை அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ள புதிய கல்வி மறுசீரமைப்புத் திட்டத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து, முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச தலைமையிலான குழுவினர் கல்வி அமைச்சிற்கு (இசுருபாய) முன்பாக நேற்று (12.01.2026) காலை முதல் தொடர் சத்தியாக்கிரகப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். இப்போராட்டத்தின் போது, பிரதமர் மற்றும் கல்வி அமைச்சரான கலாநிதி ஹரிணி அமரசூரிய உடனடியாக தனது பதவியை இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
புதிய கல்வித் திட்டத்தில் தவணைப் பரீட்சைகள் நீக்கப்பட்டமை மற்றும் பாடப்புத்தகங்களில் உள்ள சர்ச்சைக்குரிய விடயங்கள் மாணவர்களின் எதிர்காலத்தைப் பாதிக்கும் என போராட்டக்காரர்கள் குற்றம் சாட்டினர். இதற்கிடையில், கடுவெல நீதவான் நீதிமன்றம் இப்போராட்டத்திற்கு எதிராக ஒரு தடையுத்தரவை பிறப்பித்துள்ளது. தற்போது உயர்தரப் பரீட்சைகள் நடைபெற்று வருவதால், ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தவோ அல்லது வீதிகளை வழிமறிக்கவோ கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்ச்சை:
போராட்டத்தின் போது விமல் வீரவன்ச, பிரதமர் ஹரிணி அமரசூரியவை மிகக் கடுமையான மற்றும் தகாத வார்த்தைகளால் விமர்சித்ததாகக் கூறப்படும் தகவல் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. "பிள்ளைகளுக்காக நிற்கும் பெரியவர்கள்" (Adults Standing for Children) என்ற அமைப்பின் ஏற்பாட்டில் இப்போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக