BREAKING
தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை தமிழர்கள் 3 பேர் சுட்டுக்கொலை: பிரேத பரிசோதனையில் வெளியான அதிர்ச்சி தகவல் தினமும் காலையில் 2 கிராம்பு: உடலுக்கு கிடைக்கும் 5 முக்கிய நன்மைகள்! வசூல் சாதனை செய்யும் ‘இருமுடி’.. 4 நாட்களில் ரூ.100 கோடியை கடந்த ரவி தேஜா படம்! தென்னிலங்கை பொலிஸ் நிலையத்தில் பரபரப்பு; வைரல் காணொளி குறித்து உயர் மட்ட விசாரணை யாழ்ப்பாணம் - புங்குடுதீவு கடற்கரையில் உருக்குலைந்த சடலம்; அடையாளம் காண பொலிஸார் விசாரணை

யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல்; மாடு திருட்டு, வீட்டு கொள்ளை, ஹெரோயினுடன் பேர் கைது

யாழில் கூண்டோடு சிக்கிய ஆபத்தான கும்பல்; மாடு திருட்டு, வீட்டு கொள்ளை, ஹெரோயினுடன் பேர் கைது

யாழ்ப்பாணம் தீவகப் பகுதியில் அண்மைக்காலமாக அதிகரித்து வந்த மாடு திருட்டு, சட்டவிரோத இறைச்சி விற்பனை மற்றும் வீட்டு கொள்ளை சம்பவங்களின் பின்னணியில் செயல்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆபத்தான குற்றக் கும்பல் ஒன்றை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

வேலணை, புங்குடுதீவு மற்றும் அல்லைப்பிட்டி பகுதிகளில் பண்ணையாளர்களின் மாடுகள் தொடர்ச்சியாக களவாடப்பட்டு, அவை சட்டவிரோதமாக இறைச்சியாக மாற்றப்பட்டதாக பல முறைப்பாடுகள் பொலிஸாருக்கு கிடைத்திருந்தன. அதேவேளை, பல வீடுகளில் உடைத்துச் சென்று பணம் மற்றும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவங்களும் அதிகரித்திருந்தன.

பாதிக்கப்பட்ட மக்களின் முறைப்பாடுகளைத் தொடர்ந்து ஊர்காவற்துறை பொலிஸார் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில், இந்த குற்றச் செயல்களுடன் தொடர்புடையதாகக் கருதப்படும் 7 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் அதிர்ச்சி அளிக்கும் வகையில், கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரிடமிருந்து 2300 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் குறித்த கும்பலுக்கு போதைப்பொருள் வலையமைப்புகளுடனும் தொடர்பு இருக்கக்கூடும் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

பொலிஸார் தற்போது சந்தேகநபர்களை தடுத்து வைத்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். இந்த கும்பல் மேலும் எந்தெந்த குற்றச் செயல்களில் ஈடுபட்டுள்ளது, அவர்களுடன் தொடர்புடைய மற்ற நபர்கள் உள்ளனரா என்பது குறித்தும் தீவிர விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

யாழ்ப்பாணத்தில் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியிருந்த தொடர்ச்சியான திருட்டு மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளுக்கு எதிராக பொலிஸார் மேற்கொண்ட இந்த அதிரடி நடவடிக்கை முக்கிய வெற்றியாகக் கருதப்படுகிறது. இதன் பின்னணியில் மேலும் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகக்கூடும் என விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

கருத்துகள்

கருத்தைப் பதிவிடுக

💬

தேடல்

உதாரணம்: "விளையாட்டு", "அரசியல்", "பொருளாதாரம்"