சத்துக்கள் நிறைந்த பச்சை பட்டாணியை வைத்து செய்யப்படும் பட்டாணி பட்டர் மசாலா, சுவை மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் ஒருங்கே வழங்கும் பிரபலமான வட இந்திய உணவாகும். சாதம், சப்பாத்தி, பரோட்டா ஆகியவற்றுடன் சேர்த்து சாப்பிட மிகவும் பொருத்தமான கிரேவி வகை இது.
இந்த ரெசிபி செய்ய முதலில் பச்சை பட்டாணியை இரவு முழுவதும் ஊறவைத்து பயன்படுத்த வேண்டும். அதன் பிறகு தக்காளி மற்றும் வெங்காயத்தை சேர்த்து அரைத்து ஒரு மென்மையான பேஸ்ட் தயாரிக்கப்படுகிறது. பட்டை, கிராம்பு, ஏலக்காய் போன்ற வாசனை மசாலாக்கள் சேர்க்கப்படுவதால் இதன் சுவை மேலும் அதிகரிக்கிறது.
ஒரு கடாயில் வெண்ணெய் அல்லது எண்ணெய் சேர்த்து சூடானதும் மசாலா பொருட்களை வதக்க வேண்டும். பின்னர் அரைத்து வைத்த தக்காளி-வெங்காய பேஸ்டை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். எண்ணெய் பிரிந்து வரும் வரை கிளறுவது முக்கியம்.
அதன் பிறகு இஞ்சி-பூண்டு விழுது, மல்லித்தூள், மிளகாய்த்தூள், சிறிதளவு சர்க்கரை மற்றும் தக்காளி சாஸ் சேர்த்து கலக்க வேண்டும். இது கிரேவிக்கு சிறந்த சுவையும் நிறமும் தரும்.
இறுதியாக ஊறவைத்த பட்டாணியை சேர்த்து தேவையான அளவு தண்ணீர் ஊற்றி நன்றாக வேக விட வேண்டும். மேலாக கொத்தமல்லி மற்றும் சிறிதளவு ஃபிரெஷ் க்ரீம் சேர்த்தால் சுவையான கிரீமி பட்டாணி பட்டர் மசாலா தயார்.
கருத்துகள்
கருத்தைப் பதிவிடுக